முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடகை வீ ட்டில் குடியேறுகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

நகரி -ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  வாஸ்து மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். முன்பெல்லாம் முற்போக்குவாதியாக இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்த 10 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட அனுபவம் அவரை வாஸ்துன மீ து அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது எந்த செயலை தொடங்கினாலும் வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர்களின் ஆலோசனையை பெற தவறுவதில்லை.
3வது முறையாக முதல்வராக பதவியேற்ற போது கூட மேடைக்கு வந்த பின் நல்ல நேரத்துக்காக நிகழ்ச்சியை தாமதப்படுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. பதவியேற்ற பின் ஐதராபாத் லேக்வியூவில் உள்ள அவரது அலுவலகத்தை பல லட்சம் செலவு செய்து வாஸ்து படி மாற்றியமைத்தார். இப்போது சொந்த வீட்டையும் வாஸ்துப்படி மாற்றியமைக்கிறார்.
சந்திரபாபு நாயுடு தற்போது ஜூப்லி ஹில்ஸ் பகுதி 65வது ரோட்டில் உள்ள சொந்த வீட்டில் மனைவி, மகனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். வாஸ்து பிரச்சினையால் இந்த வீட்டை அவர் காலி செய்கிறார். இதற்காக பல மாதங்களாக வாடகை வீடு தேடி வந்தார். ஆனால் வாஸ்து பாதுகாப்பு ஆகிய காரணங்களால் கிடைக்காமல் இருந்தது. இப்போது ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் 24வது ரோட்டில் வாடகை வீடு அனைத்து வசதிகளுடன் கிடைத்துள்ளது. இருப்பினும் வாஸ்து படி சில மாற்றங்களை செய்து குடியேற சந்திரபாபு நாயுடு  திட்டமிட்டுள்ளார். இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பில் உளவு பிரிவு போலீ சார் தீ விரமாக உள்ளனர். அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அநேகமாக மார்கழி மாதம் முடிந்து வாடகை வீட்டில் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து