முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தேகப் பலன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விடுதலை செய்யும் போது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபிக்கப்படவில்லை அல்லது சந்தேகப் பலனின் பேரில் விடுதலை செய்யப்படுகிறார் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பண்ருட்டியை சேர்ந்த கலிவரதன் என்பவரை ஒரு வழக்கில் இருந்து விடுதலை செய்து பண்ருட்டி இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில் சந்தேகப் பலனில் விடுதலை செய்கிறேன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவலர் பணிக்காக கலிவரதன் விண்ணப்பித்தார். அப்போது அவரது விண்ணப்பத்தை காவல்துறை அதிகாரிகள் சரி பார்த்த போது கவுரவ விடுதலை என்பதை அறிந்து அதை நிராகரித்தனர்.
இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குற்றவாளி சந்தேகப் பலனில் விடுதலை செய்யப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ள அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என கலிவரதன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி எஸ். நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி ஆஜராகி மனுதாரருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. இருந்த போதிலும் மனுதாரரை மாஜிஸ்திரேட் விடுதலை செய்த போது சந்தேக பலனில் விடுவிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் மனுதாரரின் விடுவிப்பு அவரது  கண்ணியத்துக்கு களங்கத்தையும் இதர விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என வாதாடினார்.
விசாரணைக்கு  பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  வழக்கில் இருந்து ஒருவரை விடுதலை செய்யும் போது சந்தேகப் பலனில் விடுவிக்கிறேன். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற வார்த்தைகளை கீழமை நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது. குற்றவாளிக்கு எதிராக ஆவணங்கள், சாட்சிகள் ஏதும் இல்லையெனில் விடுதலை செய்கிறேன் என்று மட்டுமே கீழமை நீதிமன்றங்கள் உத்தரவில் தெரிவிக்க வேண்டும். மேலும் தேசிய குற்றப் புள்ளி விவரங்களின்படி 2012ம் ஆண்டில் 48 சதவீதம் வரை பொய் வழக்குகள் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இது போன்ற வழக்குகளில்  ஈடுபடுபவர்கள் மன அமைதி, கால விரையம், பண விரையம், அவமானம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். அதனால் மனுதாரரின் விடுதலை வெறும் விடுவிப்புதான் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து