முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

புதன்கிழமை, 31 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி தொடங்கி கடந்த 27ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல லட்சம் பக்தர்கள் ப ங்கேற்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்தார். இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். நேற்று முன்தினம் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் நடைபெற்றது.

நேற்று முதல் வருகிற 18ம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று நெய் அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். சன்னிதானத்தில் இருந்து பம்பை வரை பக்தர்கள் கூ ட்டம் காணப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் சபரிமலையில் குவிவதால் பலத்த போலீ ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வருகிற 1 4ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து