முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்கத் தேரில் பவனி

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு நேற்று முன்தினம் காலை திருப்பதி கோயிலில் உற்சவரான மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்கத் தேரில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் தங்கத் தேரில் 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்ததால் பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் அலைமோதியது. சாதாரண பக்தர்களுக்கு முன் னுரிமை அளிக்கும் வகையில் தேவஸ்தானத்தினர் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு 2,474 விஐபிக்களுக்கு தரிசன ஏற்பாடு களை செய்தனர். பின்னர் அதிகாலை 3.40 மணி முதல் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர் களுக்காக 5,500 அறைகள் ஒதுக்கப் பட்டிருந்தன. மேலும், 6 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டன. சுமார் 2 கி.மீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து