முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாக்கிசான் மகனுக்கு 6 மாதம் சிறை

சனிக்கிழமை, 10 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

பெய்ஜீங் - சீனாவில் போதை மருந்து பயன்படுத்தியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜேசி கைது செய்யப்பட்டார். அவருடன் 2 நடிகர்களும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஜேசி ஒப்புக் கொண்டதால், அவருக்கு சீன நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.

சீனாவின் தலைநகர் பெய்ஜீங் நகருக்கு அருகே ஜியோனன் பிராந்தியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஒன்றில் பிரபல நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜேசி கலந்து கொண்டார். அவருடன் தைவானை சேர்ந்த நடிகர் கைய் கோ சென்துங் மற்றும் சீன நடிகை அலிஸ் லீ ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பின் போது ஜேசியும் மற்ற இருவரும் போதை மருந்து பயன்படுத்தினர். அத்துடன் ஏராளமான போதை மருந்துகளை கைவசம் வைத்திருந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்ததும் சீன போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக பெய்ஜீங்கில்  உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது ஜேசி போதை மருந்து பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்டார். நான் போதை மருந்து பயன்படுத்தியதை ஒப்புக் கொள்கிறேன். போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவமானத்தை தந்துவிட்டதற்காக வருந்துகிறேன் என்று நீதிமன்றத்தில் ஜேசி கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஜேசி உட்பட 3 பேருக்கும் பெய்ஜீங்கில் உள்ள நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அத்துடன், 3 பேரும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து