முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி மலை பாதையில் பஸ்கள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேற்று அதிகாலை அரசு பஸ் ஒன்று பக்தர்களை ஏற்றி கொண்டு சென்றது. 2வது மலை பாதையில் 12வது மைல் கல் அருகே சென்ற போது முன்னாள் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல டிரைவர் முயன்றார். வேகமாக சென்ற போது முன்னால் சென்ற பஸ் மீது மோதியது. இதில் 2 பஸ்களும் சேதம் அடைந்தன.

இதில் பஸ்சில் சென்ற 36 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பஸ் டிரைவரின் அதிவேக பயணமே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் டிரைவரை பிடித்து அடித்து உதைத்தனர். விபத்து குறித்து திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து