முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்ப்யூட்டர் பழுது: திருப்பதியில் பக்தர்கள் பரிதவிப்பு

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் கம்ப்யூட்டர் தகவல் தொடர்பு பழுதானது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
 
பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க முடியவில்லை. மேலும் தங்கும் அறையும் ஒதுக்க முடியவில்லை. இதனால் பக்தர்கள் வரிசையில் காத்துக் கிடந்தனர்.  என்ஜீனியர்கள் துரிதமாக செயல்பட்டு கம்ப்யூட்டர் தொடர்பு பழுதை சரிபார்த்தனர். காலை 11 மணிக்கு ஏற்பட்ட பழுது மாலையில் தான் சரியானது. இதனால் பக்தர்கள் டிக்கெட் பெற 6 மணி நேரம் காத்து இருந்தனர்.
 
திருமலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை 6 மணி வரை 44,614 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பிறகு தர்ம தரிசன கியூ காம்ப்ளக்சில் 15 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் காத்து கிடந்தனர். அவர்களுக்கு தரிசனத்துக்கு 10 மணி நேரமானது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 8 கம்பார்ட்மெண்டுகளில் காத்து நின்றர். இவர்கள் தரிசனத்துக்கு 8 மணி நேரமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து