எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ‘‘டீசல் விலை குறைந்தாலும் ரெயில் கட்டணம் குறையாது’’, என்று சென்னையில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சென்னையில் நேற்று புதிய ரெயில் சேவை தொடங்கிவைத்த பிறகு மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில்வேயில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தெற்கு ரெயில்வே மண்டலம் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. சரக்கு கையாளுவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பயணிகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதைவிடவும், பயணிப்பதற்கு சுமுகமான பல்வேறு புது வசதிகள் தொடங்கப்படும். பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, மகளிர் பெட்டிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுவார்கள். மேலும் அவர்களின் பாதுகாப்புக்காக செல்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதேபோல், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன.
அலுவலகங்கள் செல்வோர்கள் சரியான நேரத்திற்கு செல்வதற்கு வசதியாக மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் வகையில் சேவை மேம்படுத்தப்படும். ரெயில்களின் சுமுக இயக்கத்திற்காக சிக்னல் தொடர்பான தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்படும்.
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக சக்தி படை போலீசார் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அதை நான் வெகுவாக பாராட்டுகிறேன். தெற்கு ரெயில்வேயில் 5 ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் ஓய்வு அறையை பயன்படுத்துவதற்கு ‘ஆன்-லைன்’ மூலமாக முன்பதிவு செய்யலாம். இந்த வசதி மேலும் பல ரெயில் நிலையங்களில் விரிவாக்கம் செய்யப்படும்.
ரெயில் பயணத்தின் போது சுகாதாரமான மற்றும் சுத்தமான உணவு வழங்குவதற்காக ‘பேஸ் கிச்சன்’ ஒவ்வொரு கோட்டங்களிலும் அமைக்கப்படும். ரெயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீர் சுத்திகரிப்பான்கள் வைக்கப்படும். இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் குவிவதை குறைக்க முடியும்.
அரசு சாரா அமைப்புகள், குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தி சுத்தப்படுத்துவது மற்றும் வளர்ச்சிக்கு தானாக முன்வர வேண்டும். ரெயில்வே அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். இதுதொடர்பான கொள்கை விரைவில் வகுக்கப்படும்.
மத்திய மாநில அரசுடன் இணைந்து ரெயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவு செய்யப்படும். இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து விட்டன. தமிழ்நாடும் விரைவில் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
6 லட்சம் கோடி முதல் 8 லட்சம் கோடி வரையிலான ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களை மாநில அரசுடன் இணைந்து விரைவாக செயல்படுத்த மத்திய அரசு விருப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 23 ரெயில் நடை மேம்பாலங்கள் கட்டும் பணி நிறைவடைந்து விட்டன. மேலும் 62 புதிய ரெயில் நடை மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பணிகளும் முடிவடைந்து விடும். பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தாலும், ரெயில்வே துறையில் செலவு அதிகமாக இருக்கிறது. ரெயில் கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை.
கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 ரெயில் நடைமேடையும், கடற்கரை ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் நடைமேடையும் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளன. வருகிற மார்ச் மாதம் முதல் இது செயல்பாட்டிற்கு வரும்.
சென்டிரல்-பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது வழித்தடத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை-கன்னியாகுமரி இடையில் இரண்டாவது வழித்தடம் அமைக்கும் பணி மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி விரைவில் நிறைவு செய்யப்படும். ராயபுரம் ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக்கும் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.