முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மூடுபனி: 24 விமானங்கள் ரத்து

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் கடந்த ஒரு வார காலமாக கடும் மூடுபனி நிலவி வருகிறது. நேற்று காலையும் அதிகளவில் மூடுபனி காணப்பட்டது. இதனால் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் 48 ரயில்கள் டெல்லிக்கு தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.டெல்லியில் கடந்த ஒரு வார  காலமாக அதிகாலை நேரங்களில் மூடுபனி காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்து காணப்படுகிறது. நேற்று காலையும்  இதே நிலைமை நீடித்தது.இந்திரா  காந்தி விமானநிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட வேண்டிய 24 விமானங்கள் மூடுபனி  காரணமாக ரத்து செய்யப்பட்டன.
 
மேலும் 46  விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன என்று விமானநிலைய  வட்டாரங்கள் கூறுகின்றன.இதேபோல், மூடுபனி காரணமாக 48 ரயில்கள்டெல்லிக்கு தாமதமாக  வந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து நேற்று காலை புறப்படும் 12 ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து