எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு - இலங்கை அதிபர் மாளிகையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய்களை கட்டுக் கட்டாக அதிகாரிகள் கைப்பற்றி மீட்டனர். மேலும் அரசு கருவூலத்திலும் ராஜபக்சே கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ராஜபக்சேவை திட்டமிட்டு தோற்கடித்தன. முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே அவசர நிலையை கொண்டு வந்து ராணுவத்தின் பின்னணியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ராஜபக்சே திட்டம் தீட்டினார். ஆனால் அவரது திட்டத்திற்கு ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர்.
இதனால் வேறு வழியின்றி தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து ராஜபக்சே வெளியேறினார். இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற சிறீசேனாவின் அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசு அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது அதிபர் மாளிகையில் ராஜபக்சே குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதிபர் மாளிகையில் ராஜபக்சே ரகசிய அறைகளை கட்டி இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தோல்வி அடைய போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ராஜபக்சே குடும்பத்தினர் பலர் தங்களது சொகுசு கார்களை வெளிநாட்டிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சூழலில் அதிபர் மாளிகையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு ராஜபக்சேவின் ரகசிய அறையில் பதுக்கியிருந்த ரூ.1500 கோடி ரொக்கப் பணத்தை கட்டுக்கட்டாக மீட்டுள்ளனர். இதில் ஏராளமான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் அடங்கும். அதிகாரிகள் மேலும் நடத்திய சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் உள்ள கருவூலத்தில் அதிபர் கட்டுப்பாட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் கோடி பணத்தில் வெறும் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் ரூ.13 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த ராஜபக்சே எந்த வித ஆவணங்களும் இன்றி பணத்தை கையாண்டுள்ளதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி மோசடி மற்றும் கணக்கில் வராத பணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சிறீசேனா அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையின் பெட்ரோலிய நிறுவனத்திற்கும், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கிக்கும் இடையே 7.5 பில்லியன் ரூபாய் அளவுக்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் பெட்ரோலிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்த ஆவணங்கள் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள 5 அறைகளில் இருப்பதாகவும், அவற்றை அழிக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த 5 அறைகளையும் மூடுமாறு இலங்கை மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், விமானங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ராஜபக்சே ஆட்சியில் அவரது மகன் நமல், சகோதரர் பசில் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் கட்டணம் செலுத்தாமல் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அதில் நாடாளுமன்ற உறுப்பினரான நமல் அதிகபட்சமாக 24 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அவர் பெல் 412 மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளார். நமல், பசில், விமல் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை செய்த விமான பயணத்திற்கான நிலுவைத் தொகை மட்டும் ரூ. 830 லட்சம் ஆகும். இதற்கிடையில் சீசெல்ஸ் தீவில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் வாங்கி குவித்துள்ள சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்தவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பொருளாதார அமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சே குடும்பத்தினர் சுவிஸ் வங்கிகளில் போட்டுள்ள பணம் குறித்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஹர்சா தெரிவித்தார். இதனால் ராஜபக்சேவுக்கு எதிரான விசாரணை மேலும் விரைவுபடுத்தப்படும் என தெரிகிறது.
ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை நடத்திய செய்திகளை இலங்கை டெலிவிஷன் நாள்தோறும் ஒளிபரப்பி வருகிறது. மேலும் ராஜபக்சேவின் சொந்த ஊரான தெற்கு மாகாணத்தில் தங்காலே என்ற இடத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ராஜபக்சேவின் சொத்துக்களை முடக்குவதற்கு சிறீசேனாவின் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.