முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 65 வயது மூதாட்டி பலாத்காரம்

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

லக்னோ - உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
 
காசியாபூர் சத்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து எழுந்த கூக்குரலை அவ்வழியே சென்ற சிலர் கேட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு அரை நிர்வாண கோலத்தில் ஒரு மூதாட்டி இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மூதாட்டி இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 4 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து