முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - குடியரசு தின விழா நாடு முழுவதும் வருகிற 26–ந்தேதி கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். இதையொட்டி தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவு துறை எச்சரித்து இருந்தது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்திலும், உள்ளூர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது. அனைத்து உஷார் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

பாதுகாப்பின் ஒரு பகுதியாக விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல  நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 30–ந்தேதி வரை இந்த தடை இருக்கும்.பார்வையாளர்கள் ரூ.60 டிக்கெட் கட்டணம் செலுத்தி சர்வதேச விமான நிலையத்துக்குள் செல்வார்கள். குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 10 நாட்களுக்கு பார்வையாளர்கள் விமான நிலையத்துக்கு உள்ளே செல்ல முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து