முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சல்: 5 பேர் பலி

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

நகரி - தெலுங்கானா  மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது. பின்னர் படிப்படியாக தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியது. தெலுங்கானாவில் புத்தாண்டு பிறந்தது முதல் இதுவரை 171 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையிலும் உஸ்மானியா அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐதராபாத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். காந்தி மருத்துவமனையில் 3 பேரும், உஸ்மானியா மருத்துவமனையில் 2 பேரும் பன்றிக் காய்ச்சலால் இறந்தனர். 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் பலியானவர்களில் 34 வயதுள்ள பெண் காந்தி நகரை சேர்ந்தவர். 36 வயதானபெண் ஜூடிமெட்லா பகுதியை சேர்ந்தவர். இது குறித்து காந்தி அரசு மருத்துவமனை இயக்குனரும், மருத்துவ கல்வி இயக்குனருமான டாக்டர் புட்டா கூறுகையில்,
 
காந்தி அரசு மருத்துவமனையில் 2  ஜூனியர் டாக்டர்களுக்கும் பன்றி காய்ச்சல் பரவி உள்ளது. கடந்த 86 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு புத்தாண்டுக்கு பிறகு குறுகிய நாட்களில் 171 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து தயார் நிலையில் உள்ளது. சிறப்பு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து