முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் டாக்டரை சுட்டுக் கொன்றவன் தற்கொலை

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

பாஸ்டன் - அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் பெண்களுக்கான தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் பெஸ்கரி என்பவர் இருதய சிகிச்சை நிபுணராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மர்ம மனிதர் ஒருவர் அங்கு திடீரென வந்தார்.

அவர் ஸ்டீபன் பெஸ்கரியை திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டாக்டர் உயிரிழந்தார். பின்னர் அந்த மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது தெரியவில்லை. டாக்டருக்கும் அவருக்கும் இருந்த தனிப்பட்ட பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. டாக்டரை கொன்றவர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து