முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்:ஜெயலலிதா இரங்கல்

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - விழுப்புரம் அண்ணாதிமுக கிளைச்செயலாளர் மறைவுக்கு அண்ணா திமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அண்ணா திமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், சிறுவந்தாடு காந்தி நகர் கிளைக்கழக செயலாளர் முத்துகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் முத்துகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு,அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனை பிரார்த்திகிறேன்.
விருதுநகர் மாவட்டம்,விருதுநகர்ஒன்றியக்கழகபொருளாளர் கே,மலையப்பன்  மறைவுக்கு அண்ணா திமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
அண்ணா திமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட மற்றொரு இரங்கல் செய்தி:

விருதுநகர் மாவட்டம்,விருதுநகர்  ஒன்றியக்கழகபொருளாளர் கே,மலையப்பன்  அகாலமரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எனது உயிரினும் மேலான எனதுகழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போதுமிகுந்த பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் செல்லவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.

அன்பு சகோதரர்  கே,மலையப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு,அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனை பிரார்த்திகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து