முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் - இந்தியா உறவில் வளர்ச்சி: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மியான்மர், இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவு நாள்தோறும் வளர்ந்து வருகிறது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
 
5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மியான்மர் நாட்டின் துணை அதிபர் சாய் மாக் காம் ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரணாப் முகர்ஜி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
 
தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மியான்மர் நாட்டின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. கடந்த சில ஆண்டுகளில் மியான்மர் நாட்டுடனான இந்தியாவின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியா - மியான்மர் நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு வர்த்தகம் நாள்தோறும் வளர்ந்து வருகிறது. மியான்மர் நாட்டின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் நாட்டில் மின்சாரம், எரிசக்தி, கட்டுமானம், வங்கி, காப்பீட்டு துறைகளில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. இந்தியாவின் வளர்ச்சி என்பது அண்டை நாடுகளுடனான நட்புறவை பேணாமல் முழுமையடையாது என்றார்.

பின்னர் மியான்மரின் துணை அதிபர் சாய் மாக் காம் கூறுகையில், விடுதலை போராட்டக்காலம் முதலே இந்தியாவுடன் மியான்மர் நாடு நல்லுறவை பேணி வருகிறது. சுகாதாரம், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்புக்காக மியான்மர் நாடு கடமைப்பட்டிருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து