முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணத்தை மீட்க இந்தியா உதவ வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்கள் வெளிநாடுகளில் முறைகேடாகப் பதுக்கியுள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான பண்ம குறித்து கண்டறிய இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியை அந்த நாட்டு அரசு நாடியுள்ளது.

இது குறித்து இலங்கை சுகாதாரத் துறை அமைச்சரும், அமைச்சரவை செய்தி தொடர்பாளருமான ரஜித் சேனா ரத்ன கூறியதாவது:

முந்தைய ஆட்சியில் உயர் பதவியில் உள்ளனர்கல் கோடிக்கணக்கான டாலர்களை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளது. எங்களுக்கு தெரியும். இந்த தொகையை கண்டுபிடித்து மீட்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் விக்ரம சின்க அறிவுறுத்தலின் பெயரில் தனிக்குழுவை அமைத்துள்ளோம்.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவியை நாடியுள்ளோம். ஊழல் குறித்து எழும் புகார்களை விரைந்து கவனிப்பதற்காக அதிக அதிகாரம் வாய்ந்த ஊழல் தடுப்பு குழுவை அமைக்கவுள்ளோம். இந்த குழு லஞ்சம் ஊழல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து