முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - பீகாரில் கோர்ட் வளாகத்தில் குண்டுவெடித்ததில்  ஒரு பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தில் உள்ள கோர்ட் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் கோர்ட் வளாகத்தில் நுழைந்ததாகவும், அவரது பையிலிருந்த குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெண்ணும், இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். எனவே, அவர் தொடர்பான விவரங்களைப் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

அப்பெண் தவிர ஒரு போலீஸ்காரர் உட்பட மேலும் இருவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேபோல், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து