முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் நடிகர் ராகவன் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ். ராகவன் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரது இரங்களை தெரிவித்தார்.

பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 89-வது வயதில் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
வி.எஸ்.ராகவன் பத்திரிக்கை துறையின் உதவி ஆசிரியராக தனது பணிமினை தொடங்கி பின்பு படிப்படியாக நாடகத் துறையிலும், திரைப்படத் துறையிலும் காலடி வைத்தார்.

1954-ம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற திரைப்படத்தின் மூலம் திரைத் துறையில் நுழைந்து 58 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் என்பது மட்டுமல்லாது, வானொலி நாடகங்களிலும், சின்னத் திரையிலும் தொடர்ந்து நடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

அனைவவரிடமும் அன்புடனும், நட்புடனும் பழகும் குணம் கொண்ட ராகவனின் இழப்பு திரைப்படத் துறைக்கும், கலைத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். வி.எஸ்.ராகவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து