எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - இந்தியாவில் நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரது வருகை முன்னிட்டு டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமா பயன்படுத்தும் அதிநவீன கார் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குடியரசு தினவிழாவின் போது வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். இதுவே மரபாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒருவர் குடியரசு விழாவுக்காக அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த அழைப்பை ஏற்று அதிபர் ஒபாமா இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி வருகிறார்.
டெல்லியில் தங்கிஇருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். அவரது இந்த பயணத்தின் போது பாதுகாப்பு,அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் வரலாற்று சிறப்புவாய்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் அதிபர் ஒபாமாவும்,பிரதமர் மோடியும் கையெழுத்திடுவார்கள். ஆகவே அவரது பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக ஒபாமா நேற்று மாலை வாசிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானபடை தளத்திலிருந்து தனது பிரத்யேக விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார்.
அவருடன் அவரது மனைவி மிச்சேல் மற்றும் அமைச்சர்கள்,தொழிலபர்கள்,அதிகாரிகள் உள்பட சுமார் 80 பேர் அதே விமானத்தில் டெல்லி வருகிறார்கள். இன்று காலை சரியாக 10மணியளவில் அதிபர் ஒபாமா ஜனாதிபதி மாளிகைக்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை அதிபர் ஒபாமா தனக்கே உரித்தான பாணியில் கம்பீரமாக நடந்து ஏற்று கொள்கிறார்.
பிறகு டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். ஒபாமா வருகை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி,ஆக்ரா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் தாஜ்மஹால் பகுதி முற்றிலும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால் ஒபாமா தனது ஆக்ரா பயணத்தையே ரத்துசெய்யவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தபட்டுள்ளன. பாதுகாப்பை கருதி ஒபாமா பயன்படுத்தி அதிநவீன கார் டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பலசிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார் எந்த சூழ்நிலையிலும் பஞ்சர் ஆகாது. அப்படியானாலும் தொடர்ந்து கார் ஓடும். இந்த காரில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த விதத்திலும் இந்த காரில் தீவிபத்து ஏற்படாது.
காரில் இருந்த படியே உலகின் எந்த பகுதிக்கும் தொடர்பு கொண்டு பேசலாம். சுருக்கமாக சொன்னால் இது ஒரு நடமாடும் அதிபர் மாளிகை என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புடைய இந்த கார் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு கடந்த 2010 ம் ஆண்டு முதல் முறையாக வந்துள்ளார். தற்போது அவர் வருவது 2 வது முறையாகும்.
இதை பெருமையாக கருதுவதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் வரலாற்றில் ஒரு நாட்டிற்க்கு 2 வது முறையாக செல்லும் ஒரே அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடதக்கது. அதுவும் இந்தியா என்பது சிறப்பு அம்சமாகும். முன்னதாக தனது பயணத்திற்கு முன் அவர் பாகிஸ்தானிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு புகழிடம் அழிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று எச்சரித்துள்ள அவர் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார்.
இந்திய பயணத்தின் போது ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் பிரதமர் மோடி பல சிறப்பு பரிசுகளை அளிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒபாமா வருகையை முன்னிட்டு டெல்லி நகரமே பரபரப்போடு காணப்படுகிறது. வரும் 27-ம் தேதி தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஒபாமா சவுதி செல்கிறார். அங்கு மறைந்த மன்னரின் உடலுக்கு ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார். இதன் காரணமாகவே அவர் தனது ஆக்ரா பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.