முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதமாற்றம் குறித்த பேச்சால் வெளிநாட்டு முதலீடு பாதிக்குமாம்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

ஜெய்ப்பூர் - மதமாற்ற விவகாரம் குறித்து பேசி வரும் பாஜ தலைவர்களை பிரதமர்  கட்டுப்படுத்த தவறினால் வெளிநாட்டு முதலீடு பாதிக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் பேசியதாவது:

பாஜ தலைவர்கள் மற்றும் விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் மத மாற்றம் குறித்து பேசி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து தொடர்ந்து பிரதமர் மோடி  மவுனம் சாதித்து வருகிறார். பாஜ மற்றும் இந்து அமைப்புகளின் மதமாற்றம் குறித்த சர்ச்சை  பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்படுவது பாதிக்கப்படும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.

இது போன்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுபவர்களை கட்டுப்படுத்த தவறினால் அவர் விரும்பும் வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வர இயலாது. இதையெல்லாம் புரிந்து  கொண்டுதான் பாஜ மற்றும் இந்து மத தலைவர்கள் பேசி வருகின்றனரா? சுத்தமான இந்தியா  போன்ற திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்த போது மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
 
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.இதுபோன்ற முட்டுகட்டைகளை கடந்து வந்தால்தான் பிரதமர் மோடியால் தனக்கென்று ஒரு இடத்தை  வரலாற்றில் உருவாக்கி கொள்ள முடியும், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து