முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 60 பேர் பலி

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

டமாஸ்க்ஸ் - சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீசியதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றன.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் புரட்சி நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இருந்து போர் ஓயவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடக்கிறது.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்க்ஸ் புறந்கரான கிழக்கு சவுதாவில் உள்ள ஹம்மோரியா நகரம் மீது சிரியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அங்குள்ள மசூதியில் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள் மீது குண்டு வீசப்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பலியாகினர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். அதனால் அங்கு பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து