முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் வெள்ள நிவாரணம்: அறிக்கை கேட்கும் அரசு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஜம்மு - வெள்ள நிராவணப் பணிகளுக்காக, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கோரிய ரூ.44,000 கோடியை விடுவிக்கும் வகையில், வகையில் விரிவான கோரிக்கை விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு, கவர்னர் வோராவை மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு, அந்த மாநிலத்தில் நிவாரணம், மீட்புப் பணிகளுக்காக, ரூ.43,959.56 கோடியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக ரூ.2,926.11 கோடியையும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.41,003.45 கோடியையும் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு நிவாரணம் வழஹ்குவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கவர்னர் வோரா கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொகை வழஹ்குவது குறித்து அடுத்த சில நாள்களில் முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. மேலும், காஷ்மீரில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி விவரம் பற்றி விரிவான அறிக்கையை, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே, மத்திய அரசுக்கு அறிக்கை, அளிப்பது குறித்து முடிவு செய்ய, சம்பந்தப்பட்ட செயலர்களின் கூட்டத்துக்கு ஏர்பாடு செய்யுமாறு தலைமைச் செயலருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து