முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகுந்த் வரதராஜன் உள்பட 2 பேருக்கு அசோக் சக்ரா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு உயரிய அசோக் சக்ரா விருதினை அறிவித்துள்ளது. இன்று நடைபெறும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த போரின் போது 2 தீவிரவாதிகளை உயிரிழப்பதற்கு முன்பு சுட்டு வீழ்த்தினார் முகுந்த் வரதராஜன். குப்வாரா மாவட்டத்தில் உள்ல கலரூஸ் வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி நடந்த மோதலின்போது ஒரு தீவிரவாதக் குழுவை வழிமறித்து தீரத்துடன் சண்டையிட்டார் தீரஜ் சிங். அப்போது நான்கு தீவிரவாதிகளை அவர் சுட்டு வீழ்த்தினார்.

3 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும், 12 பேருக்கு செளர்ய சக்ரா விருதும் வழங்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து