முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா குறித்த பா.ஜ.க. எம்.பி. பேச்சால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா - மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் கட்சியும் பா.ஜ.க.வும் எதிரும் புதிருமாக விளங்கி வருகின்றன. பர்த்வான் குண்டு வெடிப்பு மற்றும் சாரதா நிதி நிறுவன  மோசடி என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு சிபிஐ யை திரிணாமுல் கட்சியினர் மீது  ஏவி வருவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமா   மம்தா  பானர்ஜி  குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன்   திரிணாமுல் கட்சியின்  மூத்த தலைவர் முகுல்ராய் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டனர் என்றும் திரிணாமுல் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல் தலைவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய  விவகாரத்தில் நெருப்பு இல்லாமல் புகை எழும்பாது என அக்கட்சியின்  எம்.எல்.ஏ.க்களில் ஒருவராமன சபயாஷி தததா பேசியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந் த சூழ்நிலையில்  மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி  நேர்மையில்லாதவர்  என்று கூறுவதை நம்ப முடியவில்லை   என பா.ஜ.க. எம்.பி.கீர்த்திஆசாத் பேசியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும் 3 முறை எம்.பி.யுமாக வெற்றி பெற்றவருமான கீர்த்தி ஆசாத்  கொல்கத்தாவில் நிருபர்களிடம்   கூறுகையில், மேற்க  வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை    நான் சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே அறிவேன். அவர்  மிகவும்  நேர்மையற்றவர் என்று கூறப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து