எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நாட்டின் 66வது குடியரசு தின விழா நேற்று தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக் கொடி ஏற்றினார். கண்கவர் அணிவகுப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா பார்த்து பிரமித்துப் போனார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் டெல்லி வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று காலை 9.30 மணிக்கு குடியரசு தின விழா தொடங்கியது. 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் வந்தார். அங்குள்ள அமர்ஜோதி ஜவான் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை வந்தார். அவரை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி தனது மனைவியுடன் வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். தலைவர்கள் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதையில் குண்டு துளைக்காத சுற்றிலும் கண்ணாடியால் ஆன சிறப்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
9.55 மணிக்கு அதிபர் ஒபாமா மனைவி மிச்செலுடன் காரில் வந்து இறங்கினார். அவரை பிரதமர் மோடி வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றார். அப்போது லேசாக மழை பெய்ததால் ஒபாமாவுக்கு ரெயின்கோட் அணிவிக்கப்பட்டது. சரியாக 10 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜபாதை வந்தார். அவரது காரின் இருபுறமும் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து அழைத்து வந்தனர். விழா மேடை அருகே கார் நின்றதும் ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். அதிபர் ஒபாமாவும் சென்று ஜனாதிபதியை கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள் உயரதிகாரிகளை ஒபாமாவுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். தேசிய கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது.
முதலில் ராணுவத்தில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்ரா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் தியாகம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ்குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முகுந்த் வரதராஜனுக்கான அசோக் சக்ரா விருதை அவரது மனைவி முதலாவதாக மேடைக்கு வந்து ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நீராஜ் குமாரின் மனைவி விருதை பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆயுத படையின் முதன்மை தளபதி ஆகியோர் வணக்கம் செலுத்தி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பின் போது நமது ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்களின் மாதிரிகள் இடம் பெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் பி - 81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மர் போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு பெண் அதிகாரிகள் தலைமையேற்று நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த குழுவினர் அணிவகுத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து 1,200 சிறுவர், சிறுமிகளின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. தீரச்செயல் புரிந்ததற்காக தேர்வு செய்யப்பட்ட 20 சிறுவர் சிறுமிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர். அணிவகுப்புகளும், கலைநிகழ்ச்சிகளும் 2 மணி நேரம் நடைபெற்றது. அதை ஒபாமா, பிரணாப் முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்தவாறு கண்டுகளித்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தது. அவற்றை பிரதமர் மோடி அவ்வப்போது ஒபாமாவுக்கு எடுத்து கூறி விளக்கமளித்தார். ஒவ்வொரு அலங்கார ஊர்தியும் வந்த போது அவர் எழுந்து நின்று கை அசைத்து உற்சாகப்படுத்தினார். விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டார். பா.ஜனதா தலைவர் அமீத்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் க லந்து கொண்டனர். டெல்லியில் மழை பெய்ததால் முக்கிய பிரமுகர்கள் பலர் குடை பிடித்தபடி அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் பாரம்பரியப்படி சுதர் தலைப்பாகையும், கோட்சூட்டும் அணிந்து இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் தலையில் கம்பளியாலான தொப்பி அணிந்து இருந்தார். சரியாக 12 மணிக்கு தேசிய கீதம் இசைக்க குடியரசு தின விழா நிறைவு பெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினர் ஒபாமாவிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடை பெற்று சென்றார். அவரை குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து ஜனாதிபதி மாளிகைக்குன அழைத்து சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.