முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின விழா: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியேற்றினார்

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

நாடு முழுவதும் 66-ஆவது குடியரசு தினம் நேற்று   கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. விழா நடைபெறும் சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
காலையில் குடியரசு தின விழா தொடங்கியதும், காந்தி சிலை அருகே ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை, காலசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நேற்று நடந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் காவல் துறை ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2–வது பரிசு செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்துக்கும், 3–வது பரிசு தோட்டக்கலைத் துறை அலங்கார ஊர்திக்கும் கிடைத்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் வேப்பேரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசும், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை – அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 2–வது பரிசும், எத்திராஜ் கல்லூரி மாணவிகளுக்கு 3–வது பரிசும் கிடைத்தது.
மயிலாப்பூர் லேடி சிவசுவாமி அய்யர் பள்ளி மாணவிகளின் கோலாட்டத்துக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அசோக் நகர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளின் சலங்கை ஆட்டத்துக்கு 2–வது பரிசும், பிராட்வே செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்திய பள்ளி மாணவிகளின் தம்மரா நடனத்துக்கு 3–வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து