முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளில் ரத்ததானம், கண்தானம், அன்னதானம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளில் உயிர் காக்கும் ரத்த தானம் கண் தானம் மற்றும் மருத்துவ முகாம்களை மற்றும் அன்னதானம் நடத்த அண்ணாதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்ணா திமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா திமுக தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்றது. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் குமார் எம்.பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அண்ணா திமுக அவைத்தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன், உதயகுமார், கோகுல இந்திரா ஆகியோரும் அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி செயலாளர் கமலக்கண்ணன், மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர் , தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஆதிராஜாராம் , இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் ஆர்.எஸ்.முத்துசாமி, பழனிவேல், விஷ்ணுபிரபு , ராஜலட்சுமி எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தியும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், உயிர் காக்கும் ரத்த தானம் ,கண்தானம் மற்ரும் மருத்துவ முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விளையாட்டு போட்டிகள் நடத்தியும் சிறப்புடன் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா அறிவித்த !ஸ்ரீரங்கம் வேட்பாளர் வளர்மதியின் வெற்றிக்காக பாடுபடுவதென்றும் தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் துரோகம் விளைவித்த கருணாநிதிக்கு பாடம் புகட்ட  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவை டெபாசிட் இழக்க செய்வதென முடிவு எடுக்கப்பட்டது. மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை நாடெங்கும் விளக்கி மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ள செய்வதென தீர்மானிக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து