முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷ்யா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, கிழக்கு உக்ரைனில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தல் போரின் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அரசு மீறு வருகிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் கிழக்கு உள்ள கிரிமியாவை கடந்த ஆண்டில் வாக்கெடுப்பு நடத்தி, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் ரஷ்யாவுடன் இணைத்தனர். அத்துடன், பல்வேறு கிழக்கு பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்பகுதிகளில் உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இதையே தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தன.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் மின்ஸ்க் நகரில் உக்ரைன் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வாரங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் ராக்கெட் ஏவுகணை மற்றும் வெடிகுண்டுதாக்குதல் நடத்தி வருகிறது. அப்பகுதிகளில் ஏராளமான வீடுகள், பள்ளிகள் மற்ரும் மார்கெட் பகுதிகள் இடிந்தன. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி வால்ரோவ் மாஸ்கோவில் கூறியதாவது:

கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் ராணுவத்தினர் திடீரென பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மேற்கொண்டு வரும் சமாதான பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல்வேறு போர் நிறுத்த நடவடிக்கைகளை மீறி வருகின்றனர். பல்வறு போர் நிறுத்த நடவடிக்கைகளை மீறி வருகின்றனர். எனினும் உக்ரைன் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு ரஷ்யாவைகுற்றம் சாட்டுகின்றனர். போக்கை உக்ரைன் அரசு கைவிட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து