முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபா தேர்தலில் போட்டியிட அத்வானி என்னை அணுகினார்: கிரண்பேடி

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015
Image Unavailable

லோக்சபா தேர்தலில் போட்டியிட அத்வானி என்னை அணுகினார்: கிரண்பேடி
புது டெல்லி, லோக்சபா தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட மூத்த தலைவர் அத்வானி என்னை அணுகினார் என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வருகிற பிப்.7-ம் தேதி மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமூக சேவகர் அன்னா ஹசாரே ஆகியவருடன் ஆகியோருடன் ஊழலை எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய கிரண் பேடி இம்முறை பாஜவுக்கு தாவினார். இதனையடுத்து அவர் டெல்லியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கெஜ்ரிவாலுக்கு பலத்த போட்டியை உருவாக்க முடியும் என பாஜக வியூகம் வகுத்துள்ளது. கெஜ்ரிவாலும், கிரண்பேடியும் தற்போது பொது மேடைகளில் ஒருவரையொருவர் விமர்சித்து பேசி வருவதால் டெல்லி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் ஆதர்ஷ் நகர் தொகுதியில் பாஜ வேட்பாளரை ஆதரித்து கிரண் பேடி பேசுகையில், கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜ சார்பில் போட்டியிட மூத்த தலைவர் அத்வானி என்னை அணுகினார். தனிப்பட்ட முறையில் அவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நான்தான் அந்த கோரிக்கையை உறுதியாக மறுத்துவிட்டேன். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இறுந்து ஒரு முறை எனக்கு அழைப்பு வந்தது. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. அப்போது நான் டெல்லி காவல்துறையன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த கோரிக்கையையும் நான் மறுத்துவிட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து