எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பகல் 11 மணிக்கு டெல்லி சிறிகோட்டை அரங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது,
இந்தியாவின் மிகச் சிறந்த நட்பு நாடு அமெரிக்காதான் என்று நான் நம்புகிறேன். சமீப ஆண்டுகளில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மட்டுமே வறுமையில் இருந்து ஏராளமான மக்களை மீட்டுள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.
அணுசக்தி துறையில் இந்தியாவின் உண்மையான நல்ல நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியா கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இதை அமெரிக்கா வரவேற்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.
பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா போன்ற நாடுகள் சுத்தமான எரிபொருளுக்கு மாற வேண்டியது அவசியமாகும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.ஒரு நாட்டில் பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அந்நாட்டின் வளர்ச்சி அமையும். பெண்கள் வெற்றி பெற்றால், அந்த நாடே வெற்றி பெறும்.நாட்டில் பல மதங்கள் இருக்கலாம்.
ஆனால் அவற்றின் இலக்கு ஒன்றுதான். இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும், எந்த மதச்சார்பின்மையும் இல்லாத விஷயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே தான் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தை உரிய முறையில் பயன்படுத்தும் போது நமது நாடுகள் மேலும் வலிமை பெறும்.இந்தியாவில் இருந்து நிறைய இளைஞர்கள் அமெரிக்கா வருகிறார்கள்.
ஆனால் இந்திய இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி வருவதை விட அமெரிக்க இளைஞர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்கா வருவதை நான் வரவேற்கிறேன். இந்தியர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்துவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார்.
சமையல்காரரின் பேரனான நான் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறேன். உலகில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மட்டுமே இதுபோன்று நடப்பது சாத்தியமாகும்.நமது இரு வரலாறு வேறு வேறாக இருக்கலாம். ஆனால் நமது சிந்தனைகள் ஒன்றுதான்.அமெரிக்கர்களும், இந்தியர்களும் மிகச் சிறந்த உழைப்பாளிகள் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலமாக உள்ளது.இந்தியாவில் பல மதங்கள் உள்ளன.
ஆனால் கடவுளின் கண்ணுக்கு நாம் அனைவரும் சமம்.இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்பதால் அதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தியா எனக்கு இந்த கவுரவத்தை கொடுத்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த விவேகானந்தரை 150 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வரவேற்று உபசரித்தது. அவர்தான் அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு இந்தியாவின் கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது.எனவே இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும்.
இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.உள் கட்டமைப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. அது போல பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்.அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்திருந்தால், இந்த உலகம் என்றென்றும் பாதுகாப்புடன் இருக்கும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எங்களை பல வழிகளில் பலப்படுத்தியுள்ளனர்.
அது போல இங்கு உள்நாட்டில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கொடுத்து இருக்கிறீர்கள். இதன் மூலம் ஜனநாயகத்தை பேணுவதில் இந்தியா, உலகின் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.வாழ்வில் நான் பல தடவை, என் நிறம் காரணமாக வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளேன். நான் கிறிஸ்தவன் அல்ல முஸ்லிம் என்று கூட வதந்தி கிளப்பினார்கள்.ஆனால் நான் பொறுமையை கைக்கொண்டேன்.
அதில்தான் மதத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.பெண்களுக்கு நாம் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும். நான் மிகவும் மன உறுதி கொண்ட, தைரியமான பெண்ணை திருமணம் செய்து இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.நான் தவறு செய்யும் போது என் மனைவி மிச்செல், அதை தட்டிக் கேட்க தவறுவதே இல்லை. இது அடிக்கடி நடக்கும்.எங்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அழகான, வலிமையான பெண்ணால் சூழப்பட்டுள்ளேன். மிச்செல் என்னை விட மிகவும் நன்றாக நடனம் ஆடுவார்.
அவர் அளவுக்கு என்னால் ஆட முடியாது. இது எனக்கு சில சமயம் கஷ்டமாகக் கூட இருக்கும்.எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசையாக உள்ளது. ஆனால் எனது சீக்ரெட் சர்வீஸ் படையினர் அதற்கு என்னை அனுமதிப்பதே இல்லை. இந்திய குடியரசு தின விழாவில் மோட்டார் சாகசம் செய்யப்பட்டது போல எனக்கும் செய்ய வேண்டும் போல உள்ளது.ஒரு பெண் தலைமையில் எனக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்ட போதும், முப்படை அணிவகுப்பில் பெண்கள் அணிவகுத்ததை பார்த்த போதும் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
செனோரிட்டா... படே படே தேஷோன் மெய்ன்.... நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் (இது தில்வாலே துல்ஹனியா படத்தில் நடிகர் ஷாருக்கான் பேசும் வசனம்).இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரியாத வரை தொடர்ந்து வெற்றிகளை பெறும். எல்லா இந்தியர்களும் சினிமாவுக்கு போகிறார்கள். ஷாருக்கான் நடிப்பை கை தட்டி ரசிக்கிறார்கள்.
தடகளத்தில் மில்கா சிங் சாதித்தபோது எல்லா இந்தியர்களும் கைதட்டி வரவேற்றீர்கள். இந்த உணர்வு உள்ளவரை இந்தியா தொடர்ந்து வெற்றி பெறும். இவ்வாறு ஒபாமா பேசினார். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட அரங்கில் ஒபாமா பேசத் தொடங்கியதும் ‘‘நமஸ்தே’’ என்று கூறினார். பேச்சை முடிக்கும் போது, ‘‘பகுத் தனியாவத் (மிக்க நன்றி) என்று கூறினார்.பிறகு பார்வையாளர்கள் பக்கம் சென்று கையசைத்தார். சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது லகான் படத்தில் வரும் ‘‘ஓ... மித்வா...’’ பாடல் ஒலிபரப்பானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்