முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்.3-ல் அண்ணா நினைவு நாளில் மதுசூதனன் தலைமையில் அஞ்சலி

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - பேரறிஞர் அண்ணாவின் 46 வது நினைவு நாளையொட்டி வரும் 3 ந்தேதி இ.மதுசூதனன் தலைமையில் அண்ணா திமுகவினர் அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படும் என்று அண்ணா திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

பேரறிஞர் அண்ணாவின் 46–வது ஆண்டு நினைவு நாளான 3–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3–ந்தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து