முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கியால் சுட்டு மனைவியை கொலை செய்தவர் கைது

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்தமங்கலம் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பணியில் இருந்து ஒய்வு பெற்ற சுரேஷ் சொந்த ஊர் திரும்பி மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
 
சமீப காலமாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சண்டை தொடர்ந்து நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது துப்பாக்கியை எடுத்து வந்து ஸ்ரீஜாவை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் உள்ளோர் வந்ததும் சுரேஷ் தப்பியோடி விட்டார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து கோழிக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து