முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியை ராஜினாமா செய்ய கேரள நிதி அமைச்சர் மறுப்பு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குள் கேரளாவில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். அதற்கேற்ப மதுபார்களை மூடுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளது.
 
இந்த நிலையில் மூடப்பட்ட மது பார்களை மீண்டும் திறக்க மதுபார் உரிமையாளர்களிடம் இருந்து கேரள நிதி அமைச்சர் கே.எம். மானி ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மாநில  லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மந்திரி மானி பதவி விலகக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கேரளாவில் முழு அடைப்பும் நடைபெற்றது. இந்த பிரச்சினை குறித்து மந்திரி மானி கூறுகையில்,
 
எனது அரசியல் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள  நான் 12 முறை சட்டசபை தேர்தலில் வென்றுள்ளேன். இந்த சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை. தற்போது எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த குற்றச்சாட்டை கூறி உள்ளனர். இது அரசியல் சதியாகும். எனது துறைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தில் நான் எப்படி பணம் வாங்க முடியும். பார்களை திறப்பதோ, மூடுவதோ என் கைகளில் இல்லை. எனவே நான் மந்திரி ப தவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து