முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கல்வி கொள்கை: ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் 1992ல் மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன் பிறகு தேவைக்கேற்ப அந்த கொள்கை பல முறை திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது புதிய கல்வி கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பள்ளி தாளாளர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. ஆலோசனை அளிக்க விரும்புவோர் குழு அமைத்து தங்கள் கருத்துக்களை www.mygov.in  என்ற இணைய தளத்தில் தெரிவிக்கலாம். இந்த ஆலோசனைகள் இந்த ஆண்டு முழுவதும் பெறப்படும்.
 
பள்ளி தேர்வு முறையை மறுசீரமைப்பது, கிராமப்புற எழுத்தறிவு விகிதத்தை அதிகப்படுத்துவது, அறிவியல், கணித பாடங்களை கற்பிப்பதில் புதிய அணுகுமுறை, உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை சீரமைப்பது உள்ளிட்ட 33 மைய கருத்துக்களின் அடிப்படையில் புதிய கல்வி கொள்கைக்கான பொதுமக்களின் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து