முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி நிறுவன வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா - சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. குணால் கோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
 
சாரதா நிதி நிறுவன மோசடியில் செல்வாக்குள்ள நபர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பணம் போய் சேர்ந்துள்ளது. இந்த மோசடியில் அரசியலும் அடங்கியுள்ளதால் இந்த விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் இதில் தொடர்புடைய அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யும் வரை தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
 
குணால் கோஷின் மீது இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து