முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாதனை படைக்க தேசிய மாணவர் படையினருக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு உலக சாதனை படைக்க தேசிய மாணவர் படைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 
டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது சர்வதேச யோகா தினமான ஜூன் 21ல் தேசிய மாணவர் படையினர் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ம் தேதியை ஐ.நா. சபை கடந்த மாதம் அறிவித்தது.  அந்த நாளில் நாடு முழுவதும் தேசிய மாணவர் படையினர் யோகாசனம் பயிற்சி செய்து உலக சாதனை படைக்க வேண்டும். இந்த சாதனையை செய்வதில் இந்தியர்களாகிய நமக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. நாடு முழுவதிலிருந்தும் மிக அதிகமான மாணவர்கள் பங்கெடுத்து  உலகின் மற்ற யோகா சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து