முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதா?

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திண்டுக்கல் - தனிப் பெரும்பான்மை இருப்பதால் மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.
 
காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறை சார்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,
 
நுகர்வோரின் உரிமைகளை அழிப்பதற்காக தொழிலாளர் சீர்திருத்த சட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உருவாக்குவோம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சூரியமின்சக்தி சாதனங்களை விற்பனை செய்யும் சந்தையாக இந்தியாவை பயன்படுத்தியதற்கு ஒபாமா அரசு திட்டமிட்டுள்ளது. தனிப் பெரும்பான்மை இருப்பதால் விவசாயிகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து