முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: புரட்சி தமிழகம் அதிமுகவிற்கு ஆதரவு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - புரட்சி தமிழகம் கட்சியின் மாநில தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பொது செயலாளர் அறிவித்துள்ள வேட்பாளர் எஸ்.வளர்மதியை ஆதரிப்பது என புரட்சி தமிழகம் முடிவெடுத்துள்ளது.

உழைக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சியை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு மேல்நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதிபடுத்தவும் வருகின்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற தேர்தல் பணியாற்றிட புரட்சி தமிழகம் கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலாளர் கே.சிவகுரு தலைமையில் தேர்தல் பணிக்குழு பிரசாரம் செய்ய உள்ளதாக கூறி உள்ளார்.

இந்திய தேசிய மக்கள் இயக்கம்
 
இந்திய தேசிய மக்கள் இயக்க நிறுவன தலைவர் டாக்டர் தேசியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அடுத்த மாதம் நடைபெற  உள்ள ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எங்களது இந்திய தேசிய மக்கள் இயக்கம் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு ஆதரவளிக்க உள்ளோம்.

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்கள் தமிழகத்தில் என்றுமே தொடர இந்த இடைத்தேர்தல்  மூலம் மக்கள் மீண்டும் முடிவெடுப்பார்கள். அதற்கு உறுதுணையாக எங்களது இயக்க நிர்வாகிகளும் தொண்டர்களும் ஸ்ரீரங்கத்தில் தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெரும்.வழக்குகளில் இருந்து மக்களின் ம் முதல்வர்  ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக வருவார்.மக்கள் நல திட்டங்களை தொடருவார்.என்று கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து