முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகரெட் வியாபாரிகள் முதல்வருக்கு மனு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் சிகரெட் மீதான வரியை  குறைக்க  வேண்டும் என்று  வலியுறுத்தி  சிகரெட் வியாபாரிகள் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை வடக்கு மண்டல சிகரெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் சிகரெட் வியாபாரிகள்  முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர், அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

சிகரெட் மீதான வரி தமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ளதால் சிகரெட்டின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது, அண்டை மாநிலங்களில் வரி  மிகவும் குறைவாக உள்ளது.   தமிழக அரசின் 30 சதம் வாட் வரி உயர்வால் தரமான சிகெரெட்டின் விலைஅதிகமாகி விட்டது.

எனவே தமிழக அரசு இந்த வருமான வருமான இழப்பை கருத்தில் கொண்டும் தமிழகசிறு வியாபாரிகளை நலனை கருத்தில் கொண்டும்  வரி குறைப்பு செய்து உடனடியாக பழைய வாட் வரியை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து