முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

மாயாவதி மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
லக்னோ - பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, வேட்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளவர் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தத்து பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுவதர்கான இடங்களை விற்பனை செய்வதை, மாயாவதியும், அவரது இடைத் தரகர்களும், வழக்கமாகக் கொண்டிருந்தனர். கட்சியில் உள்ளவர்களை மாயாவதி மிரட்டி வைத்திருப்பதால் அவரை எதிர்த்து யாரும் குரல் கொடுக்க முடியாது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை பகுஜன் சமாஜ் கட்சி சுயபரிசோதனை செய்யவில்லை. இது தொடர்பாக, மாயாவதி கூறிய தவறான தகவல்களை கட்சியினர் ஏற்றுக் கொண்டனர் என்று தத்து பிரசாத் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியின் போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் தத்து பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து