முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் கமிஷனரிடம் சின்னத்திரை நடிகை புகார்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - பேஸ்புக்கில் என்னை ஆபசமாக சித்தரித்து படம் வெளியிடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சின்னத்திரை நடிகை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். சின்னத்திரை நடிகை லாவண்யா சுரேந்தர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்தமனுவில் அவர் கூறியதாவது:-

என் பெயர் லாவண்யா சுரேந்தர் (வயது30). நான் சன் டிவியில் வரும் நாடகங்களில் தென்றல்,  ஜெயா டிவியில் கால பைரவர், விஜய் டிவியில் நீயா நானா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறேன்.மேலும் மேடை பாடகியாகவும் உள்ளேன்.

 எனது கணவர் சுரேந்தர்.  என் கணவருடன்  சைதாப்பேட்டையில்  வசித்து வருகிறேன்.  கடந்த 6மாதத்திற்கு முன்பு பேஸ்புக்கில் என்னை ஆபாசமாகவும் அரை நிர்வாணமாகவும் சித்தரித்து யாரோ என் பெயருக்கு  கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டு இருந்தனர்.

இதை பார்த்து மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயன்றேன்.அப்போது என் கணவர் தடுத்து விட்டார். இதுகுறித்து ஏற்கனவே கமிஷனரிடம் புகார் அளித்தேன்.அவர்கள் நடவடிக்கையின் பேரில் பேஸ்புக்கில் உள்ள படங்கள் அனைத்தையும்  எடுத்துவிட்டனர்.

அதில் இருந்து நான்பேஸ்புக்கில் படங்களை போடுவதும்  பகிர்ந்து கொள்வதும் இல்லை.இந்த நிலையில், கடந்த 2 மாதமாக அதேபோன்று என் படங்களை ஆபசமாக சித்தரித்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கமிஷனர் உடனடி நடவடிக்கை எடுத்து பேஸ்புக்கில் எனது படத்தை ஆபாசமாக  சித்தரித்து வெளியிடும் நபர்கள் யார் என்று கண்டு பிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு மீது உடனடி  நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசாருக்கு  கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து