முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் டி.பி. பூனாட்சி உத்தமர்சீலியில் பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

மண்ணச்சநல்லூர் - ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி உத்தமர் சீலி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.  உத்தமர்சீலி, கிளிக்கூடு, பனையபுரம் ஆகிய கிராமங்களில் அமைச்சர் பூனாட்சி வீடு, வீடாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார்.

அப்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றிய பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பொது மக்களிடம் தெரிவித்தார்.  அமைச்சருடன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வக்கீல் ரத்தினவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுமார், எம்.கே.ராஜமாணிக்கம், சேனை.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட ஆவின் பால்வள இயக்குனர் எஸ்.எம். ராஜேந்திரன், கிளைக்கூடு, பனையபுரம், உத்தமர்சீலி பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று ஓட்டு கேட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து