முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்னல் எம்.என். ராயின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஜம்மு காஷ்மீ ர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ அதிகாரி கர்னல் எம்.என். ராயின் உடல் ராணுவ மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
 
டெல்லியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இறுதி சடங்கில் அவரது உடலுக்கு ராணுவ தலைமை தளபதி தல்பீர்சிங் சுஹாக், மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் எம்.என். ராயின் உடல் வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அவரது சகோதரர் கர்னல் டி.என். ராய் தீ மூட்டினார். இவர் ராணுவத்தில் கோர்க்கா ரைபிள் படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இறுதி சடங்கில்  எம். என். ராயின் மனைவி, இரண்டு மகள்கள், மகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எம்.என். ராயின் படை பிரிவை சேர்ந்தவர்கள் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை வீ ரர்கள், ராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் உயரதிகாரிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 
ஜம்மு காஷ்மீ ர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீ விரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் எம். என். ராய் உயிரிழந்தார்.  அதற்கு முன்னதாக குடியரசு தின விழாவில் அவருக்கு வீரதீ ர செயல் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே எம்.என். ராயின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்டுரை பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, கர்னல் ராயின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஒரு கட்டுரை பதிவு, அவர்களின் கண்ணீரை துடைத்து விடாது. இந்தியாவுக்காக இன்னுயிரை நீத்த அனைவருக்கும் எனது வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து