எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிரச்சாரத்தில் குதிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வரை டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால் சமீபத்தில் எடுத்த கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சதவீத ஓட்டுகள் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான ஒரு கருத்துக் கணிப்பில் பாஜகவும், ஆம் ஆத்மியும் தலா 31 முதல் 36 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் டெல்லி வாக்காளர்கள் கிரண்பேடியை விட அரவிந்த் கெஜ்ரிவாலையே முதல்வராக்க விரும்புகிறார்கள் என்றும் அதில் தெரியவந்தது. கெஜ்ரிவாலுக்கு 43 சதவீதம் பேரும், கிரண்பேடிக்கு 30 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் ஓய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் சூழ்நிலை மாறுவதை உணர்ந்த பாஜக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதம் குறைந்து வருவதாகவும், டெல்லியில் மோடி அலை இல்லை என்றும் மக்களிடையே பேச்சு பரவி இருப்பதும் பாஜக மூத்த தலைவர்களை கவலை அடைய செய்துள்ளது. எனவே டெல்லி தேர்தல் பிரச்சார வியூகத்தை பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா அதிரடியாக மாற்றியுள்ளார்.
பாஜகவின் அனைத்து பிரிவு தலைவர்களையும் அவர் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் களமிறக்கி விட்டுள்ளார். அருண்ஜெட்லி தலைமையில் 11 மத்திய மந்திரிகள் தேர்தல் பிரச்சார பணிகளை ஒருங்கிணைத்து கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார்.
மோடி பேச மொத்தம் 4 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் முதல் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தொடர்ந்து 4 நாட்களுக்கு டெல்லியில் மோடி பேசவுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு டெல்லியில் ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். ஆனால் அப்போது எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரண்டு வரவில்லையாம். எனவே இன்று முதல் 4 நாட்களுக்கு நடக்கும் பொதுக்கூட்டங்களுக்காவது மக்கள் ஆதரவு கிடைக்குமா என்று பாஜக மூத்த தலைவர்கள் தவிப்பில் உள்ளனர்.
கெஜ்ரிவாலின் கடைசி நிமிட புயல் வேக பிரச்சாரமும் பாஜக தலைவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. அவர் தெரு தெருவாக நடந்து சென்று ஓட்டு வேட்டை நடத்துவதால் பாஜகவும், அதே பாணி பிரச்சாரத்தை கையாள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 120 பாஜக எம்.பி.க்களை அமீத்ஷா களம் இறக்கியுள்ளார். நேற்று முன்தினம் முதல் அவர்கள் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளையும் முற்றுகையிட்டுள்ளனர்.
டெல்லி வாக்காளர்களை கவரும் வகையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காலனிகளில் வாழும் 25 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி பேசி வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல வழிகளில் பாஜகவுக்கு நெருக்கடி இருப்பதால் தெருவுக்கு தெரு கூட்டம் நடத்த அமீத்ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வரும் 6ம் தேதிக்குள் 70 தொகுதிகளிலும் சுமார் 250 பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக வியூகம் அமைத்துள்ளது. தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. கிரண்பேடியை முன்னிறுத்தினால் ஓட்டுகளை அள்ளி விடலாம் என்று பாஜக மூத்த தலைவர்கள் நினைத்தனர்.
ஆனால் கொள்கை திட்ட அறிவிப்புகள் உட்பட பல விஷயங்களில் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவது அவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த நிலை ஆம்ஆத்மி கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒவ்வொரு பூத் அளவிலான பாஜக தொண்டர்கள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளது பாஜக. ஆயிரம் இடங்களில் பாஜகவின் திட்டம் பற்றிய பிரம்மாண்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தன் முழு பலத்தையும் பயன்படுத்துவதால் டெல்லி தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.