முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்து முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நேற்று தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தை தெப்ப திருவிழா கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் தெய்வானையுடன் முருகப் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தெப்ப முட்டு தள்ளுதல் மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தெப்ப மிதவை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தெய்வானையுடன் முருகப் பெருமான் தெப்ப மிதவைக்கு வந்தார். தொடர்ந்து தெப்ப மிதவையுடன் இணைக்கப்பட்ட வடத்தை பொதுமக்கள் இழுக்க சுவாமி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர். நேற்று இரவில் மின்னொளியில் தெப்ப உற்சவம் மீண்டும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து