முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூட்டிக்கிடந்த காவல் நிலையத்தில் 60 மண்டை ஓடுகள்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

லக்னோ - உ.பி.யில் பூட்டியிருந்த பழைய போலீஸ் நிலையத்தில் 60 மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
உத்தரபிரதேச மாநிலம் உன்னோ பகுதியில் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடம் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில ் அப்பகுதியில் தோண்டி பார்த்த போது 60 மனித மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகளும் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி போலீசார் கூறும் போது, இந்த மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகளும் இங்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட உடல்களை சேர்ந்தவைகள் என்று தெரிகிறது. அவைகள் போலீஸ் நிலைய மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பயன்படுத்தாத நிலையில் புதைக்கப்பட்டது. இவை எல்லாமே பழமையான மண்டை ஓடுகளாகும். இது  பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றனர். சமீபத்தில் கங்கை நதியில் 100 ச டலங்கள் அடுத்தடுத்து மிதந்து வந்த சம்பவத்தை அடுத்து இந்த சம்பவம் தெரியவந்திருப்பதால் அப்பகுதியில் பரபரப்பும் திகிலும் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து