முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைபொருள் வைத்திருந்ததாக மலையாள நடிகர் கைது

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல மலையாள நடிகர் டாம்சாக்கோ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சில நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு பார்ட்டிகளில் போதை  பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இது தொடர்பாக கொச்சி  போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இதில் கொச்சி  கடுவந்தராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மலையாள நடிகர் டாம்சாக்கோ  வீட்டில் போதை பொருள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. நேற்று அதிகாலை போலீசார் அந்த குடியிருப்பில் அதிரடியாக புகுந்து நடிகர் டாம்சாக்கோ வீட்டில் சோதனை நடத்தினர்.
 
அங்கு 10  கிராம் அளவுக்கு கோகைன் என்ற போதை பொருள் இருந்தது. இது அந்த வீட்டில்  இருந்தவர்கள் பயன்படுத்தியது போக மீதி என்று தெரிய வந்தது.நடிகர் டாம்சாக்கோவுடன் மேலும் 4  இளம்பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது  செய்யப்பட்டனர். நடிகர் டாம்சாக்கோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான  இதிகாசா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். அவருடன் கைதான பெண்களில் ஒருவர் சினிமா உதவி டைரக்டராகவும், இன்னொருவர் மாடலாகவும் பணிபுரிகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து