முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது வழக்கு

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - முன்னாள் மத்திய காங்கிரல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்து உள்ளது.
காங்கிரல்கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை கேபினர் அமைச்சராக இருந்தவர்  தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன்.

இவர்  பதவியில் இருந்த போது காங்கிரஸ் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பதவி விலகினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயந்தி நடராஜன், ராகுல்காந்தியின் தூண்டுதலின் பேரிலேயே நான் பதவி விலக்கப்பட்டேன்.

மேலும் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் எனக்கு நெருக்கடியும் கொடுக்கப்பட்டது என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறையின் கோப்புகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில்  ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ திடீரென மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து