முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., வீரர்கள் தாக்கினால் பதிலடி கொடுங்கள்: ராஜ்நாத்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினால் வெள்ளை கொடியை காட்டாதீர்கள். பதிலாக திருப்பி இரண்டு மடங்கு அதிகமாக திருப்பி தாக்குங்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் துக்ளாபாத் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு மத்திய பாஜஅரசு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெள்ளை கொடியை ஆட்டிக்கொண்டிருந்த வேளையில் தற்போது நாங்கள் இரண்டுமடங்கு அதிகமாக பதிலடி கொடுக்க வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

ஒரு நாள் நான் டிவியை ஆன் செய்த போது எல்லை பகுதியில் 5 வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை காட்டினர். அப்போது எல்லை பகுதியில் இந்திய வீரர்கள் வெள்ளை கொடியை அசைத்து காண்பித்துக் கொண்டிருந்ததையும் காட்டினா். நான் உடனே ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்ட போது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து சமாதானம் அல்லது பேச்சுவார்த்தைக்காக இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்றனர்.

17 முறை வெள்ளை கொடியை காண்பித்த பிறகும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எனவே இனிமேல் தாக்கினால் இரண்டு மடங்காக திருப்பி பதிலடி கொடுங்கள் என்று உத்தரவிட்டேன் என்று பேசினார். டெல்லியில் நிலையான ஆட்சி அமைந்தால் தான்போதிய நிர்வாகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனவே பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து